உலகம் :
ஆசிய விவகாரங்களில் தலையிடாதீர்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை
தென் சீனக் கடலில் தங்களுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நிலவும்பிரச்சினையில் அமெரிக்க தலையிட வேண்டாம் என சீனா எச்சரித்து உள்ளது.
தென் சீனக் கடலை நீண்ட நாட்களாக சொந்தம் கொண்டாடி வரும் சீனாவுக்கும்பிலிப்பைனஸ், மலேசியா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையேமோதல் நடந்து வருகிறது.
இதனால் தென் சீனக் கடலை சுற்றி மணற் கற்களைக் கொண்டு செயற்கைத்தீவுகளை உருவாக்கி வருகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கபோன்ற நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சீனப் பாதுகாப்பு அமைச்சர் சஹாங் வான்குவான்அமெரிக்காவின் செயல்பாடு குறித்து கூறும்போது, "தெற்காசிய விவகாரங்களில்அமெரிக்க தொடர்ந்து தலையிட்டு வருவதை சீனா எச்சரிக்கிறது. அமெரிக்காதனது அதிகாரத்தை தெற்காசியப் பகுதிகளில் செலுத்த முயற்சி செய்துவருகிறது.
மேலும், அமெரிக்கா ராணுவ பலத்தைக் கொண்டு பிற நாடுகளுடன் ராணுவஉடன்படிக்கைகளையும், பொருளாதார உடன்படிக்கைகளையும் வலுப்படுத்திவருவதை சீனா கவனித்து வருகிறது" என்றார்.
இந்தியா :
இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர்: அக். 15-ல் நரேந்திர மோடி, புதின் சந்திப்பு -பாதுகாப்பு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கு வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை வரும் 15-ம் தேதி பிரதமர்நரேந்திர மோடி சந்தித்துப் பேச உள்ளார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் குறித்துமுக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்காஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதன் 8-வது உச்சி மாநாடு கோவாவில் வரும்15, 16-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 4 நாட்கள் பயணமாக வரும் 14-ம்தேதி கோவா வருகிறார். அவரை பிரதமர் நரேந்திர மோடி 15-ம் தேதி சந்தித்துப்பேசுகிறார்.
அப்போது பாதுகாப்பு, வர்த்த கம் குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்படஉள்ளன. 5எஸ்-400 டிரிம்ப் ஏவுகணை தடுப்பு கேடயம், காமோவ்-28 ரகஹெலிகாப்டர்களை வாங்குவது, சுகோய் 30 ரக விமானங்களை மேம்படுத்துவதுகுறித்து புதினிடம் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழ்நாடு :
தமிழக காங்கிரஸ் மீனவர் அணிக்கு புதிய நிர்வாகிகள்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணிக்கு புதிய நிர்வாகிகளை அந்தஅணியின் தலைவர் எஸ்.டி.சபீன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக காங்கிரஸின் மீனவர் அணிக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் உள்ளசில பொறுப்புகளுக்கு புதிய நிர் வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். அதன்படி,தமிழக காங் கிரஸ் மீனவர் அணியின் துணைத் தலைவர்களாக ஆர்.பார்த்திபன்,ஆர்.சத்தியா, மாநில பொதுச் செயலாளர்களாக டி.பிரேம் சஞ்சீவி, தெய்வநாயகி,கே.ரவி, மாநில செயலாளராக எஸ். பிரேம்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சென்னை வடக்கு மாவட்டத்துக்கு ஜெ.ஜெயந்தன், திண்டுக்கல்மாவட்டத்துக்கு ஆர்.அந்தோணி, திருச்சி வடக்கு மாவட்டத்துக்குஎஸ்.பி.மணியன், திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு குணசேகரன்,ராமநாதபுரத்துக்கு முத்துராஜ் ஆகியோர் மீனவர் அணி மாவட்ட தலைவர்களாகநியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட நியமனங்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசரின்ஒப்புதலோடு நடந்துள்ளன. இவ்வாறு எஸ்.டி.சபீன் கூறியுள்ளார்.
பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரிட்டன் அமைச்சரவைக் கூட்டத்துக்குஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஹேக்கர்கள்
ஆப்பிள் வாட்சுகள் மூலம் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்ப்பதாக உலகம்முழுவதும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அமெரிக்காவின் ஜனநாயகக்கட்சியின் இணையதளத்தை ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்ததாகக் கடந்தவாரம் குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல, உலகின் முன்னணி தடகள வீரர்கள்சிலரின் மருத்துவ அறிக்கைகளையும் ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்த்து,இன்டர்நெட்டில் வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஆப்பிள் வாட்ச்சுக்குத் தடை
இந்நிலையில் பிரிட்டன் பிரதமராக தெரேசா மே பதவியேற்ற பின்,அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கொண்டுவரத் தடை செய்யப்பட்ட பொருட்கள்பட்டியலில் ஆப்பிள் வாட்ச்சும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது. ரஷ்ய ஹேக்கர்கள் உளவு பார்க்கக்கூடும் என்ற காரணத்தால்இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக டேவிட் கேமரூன்பிரிட்டன் பிரதமராக இருந்த போது அமைச்சரவைக் கூட்டங்களுக்கு ஸ்மார்ட்போன்கள் கொண்டுவரத் தடை செய்யப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
உடல்நலம் பெற்று பணிக்கு திரும்பும்வரை முதல்வரின் இலாகாக்களைஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு
முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்கு திரும்பும்வரை, அவரின்பொறுப்புக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழகஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். அமைச்சரவைகூட்டங்களுக்கும் ஓ.பி.எஸ். தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர்தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை அலுவலகம் செவ்வாய்கிழமை வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, முதல்வர்ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள் அனைத்தும் நிதி, பணியாளர் நலன்மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டங்களுக்கு இனி நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்தலைமை வகிப்பார். முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி, அவர்மீண்டும் தனது பணிகளை கவனிக்கும் வரை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.முதல்வர் பதவியில் ஜெயலலிதாவே நீடிப்பார்.
விளையாட்டு :
டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா
நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 321 ரன்கள்வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தத் தொடரின் முந்தைய 2 போட்டிகளிலும் வென்ற இந்திய அணி, 3-ஆவதுபோட்டியின் வெற்றி மூலமாக தொடரை முழுமையாக கைப்பற்றி (3-0) சாதனைபடைத்துள்ளது.
இந்த இரு அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் இறுதி டெஸ்ட்கிரிக்கெட் போட்டி இந்தூரில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்றுமுதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது.
2024 ஒலிம்பிக்: ஏலத்திலிருந்து விலகியது இத்தாலி
2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்துஇத்தாலி விலகியுள்ளது.
அந்நாட்டின் ரோம் நகருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேயர் விர்ஜினியாராக்கி, அந்தத் திட்டத்துக்கு ஆதரவு வழங்க மறுத்ததால் போட்டியைநடத்துவதற்கான ஏலத்தில் இருந்து இத்தாலி விலகுவதாக அந்நாட்டு ஒலிம்பிக்கமிட்டி தலைவர் கியோவன்னி மலாகோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:
2024-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் இருந்துவிலகுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை கடிதம்எழுதியுள்ளேன். இத்தகைய முடிவை எடுப்பதற்கு நான் நிர்பந்திக்கப்பட்டுள்ளேன்.
ஜிம்பாப்வே பயிற்சியாளராக ஹீத் ஸ்ட்ரீக் நியமனம்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, அந்த அணியின்முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் கடந்த ஜூன் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தற்போது ஸ்ட்ரீக் அந்தப் பொறுப்புக்கு 2ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம்அறிக்கை வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் :
7 நகரங்களில்... மின்னணு வர்த்தக நிறுவனங்களால் கிடங்குகளுக்குதேவை அதிகரிக்கும்
‘தயாரிப்பு மற்றும் மின்னணு வர்த்தக நிறுவனங்களால், அடுத்த நான்கு ஆண்டுகளில், ஏழு நகரங்களில், பொருட்கள் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க, 83.90கோடி சதுர அடி நிலம் தேவைப்படும்’ என, நைட் பிரான்க் இந்தியா நிறுவனம்மதிப்பிட்டு உள்ளது.
இது தொடர்பாக, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை விபரம்:என்.சி.ஆர்., என அழைக்கப்படும், டில்லி மற்றும் சுற்றுப்பகுதிகள், மும்பை,சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புனே, ஆமதாபாத் ஆகிய நகரங்களில்,கிடங்குகளுக்கான தேவை அதிகரிக்கும்.
அரசு கொள்முதல்; சி.ஐ.ஐ., வெள்ளை அறிக்கை
இந்திய தொழிலக கூட்டமைப்பான, சி.ஐ.ஐ., வெளியிட்டுள்ள வெள்ளைஅறிக்கை விபரம்: பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய அரசு அமைச்சகங்கள்,துறைகள் ஆகியவை, கொள்முதல் செய்யும் பொருட்களில், குறைந்தபட்சம், 20 சதவீதத்தை, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து பெறவேண்டும்; அதில், 4 சதவீதத்தை, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்நடத்தும், குறு, சிறு நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
இந்த விதிமுறையை, 2014 – 15ம் நிதியாண்டில், 133 பொதுத் துறை நிறுவனங்களில், 43 நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றி உள்ளன. அதனால், அரசுகொள்கை பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, வலிமையானஅமைப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்அடங்கிய, பொது தகவல் தொகுப்பை உருவாக்க வேண்டும். நாட்டில் உள்ள,குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றை பொது தகவல்தொகுப்பில் சேர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment